Monday, 17 October 2016


தமிழாசிரியர்களுக்கான வெளிநாட்டுக் கல்விப் பயணம் 2016
பாண்டிச்சேரி, இந்தியா

27/11– 6/12, 2016


பயணப் பின்னணி:

சிங்கப்பூர் ஆசிரியர் கலைக்கழகத்தின் மேற்பார்வையில் இயங்கும் தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகம் தமிழாசிரியர்களுக்கான வெளிநாட்டுக் கல்விப் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்மொழி, இலக்கியம், பண்பாட்டுக் கூறுகள், கற்பித்தலியல் பற்றிய ஆசிரியர்தம் அறிவாற்றலை மேலும் ஆழப்படுத்தும் நோக்கில் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. திறன்மிகு பேராசிரியர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் ஆகியோரின் விரிவுரைகளைக் கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஆசிரியர்கள் தம் பணித்திறனை மேம்படுத்திக்கொள்ளச் செய்வதே இக்கல்விப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், ஆசிரியர்கள் அங்கிருக்கும் கல்வி நிலையங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க வரலாற்று, பண்பாட்டுச் சிறப்புப்பெற்ற இடங்கள் ஆகியவற்றிற்குச் சென்று  அனுபவக் கல்வி பெறும் வாய்ப்புகளைப் பெறுவர். தனிநபராகவும் ஆசிரியர் சமூகமாகவும் தாம் பெற்ற புத்தறிவையும் மேம்பட்ட பணித்திறனையும் தம் சக ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு இக்கல்விப்பயணம் வழிவகுக்கும்.

பயண நோக்கங்கள்:
[1] சிங்கப்பூர் ஆசிரியர்களின் கல்வி சார்ந்த நோக்கையும் கண்ணோட்டத்தையும் விரிவுபடுத்துதல்
[2] வெளிநாட்டுச் சூழலில் மேற்கொள்ளப்படும் தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் முறைகளைக் கண்ணுற்று, ஏற்புடையனவற்றை உள்நாட்டுச் சூழலுக்குப் பொருந்துமாறு வடிவமைக்கும் சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் வழியமைத்தல்
[3] வெளிநாட்டுத் தமிழ் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் ஆகியோருடன் கல்வித்துறையின் அண்மை முன்னேற்றங்கள்பற்றிக் கருத்துப்பரிமாற்றம் நிகழ்த்தி, இருவேறு நாடுகளின் கல்வி, பண்பாடு தொடர்பான புரிதலை வளர்த்திட வாய்ப்பளித்தல்
[4] வெளிநாட்டுக் கல்வியாளர்களுடன் கலந்துரையாடுவதன்வழி அவர்தம் பணிசார் திறன்களைப் பயன்படுத்துவதற்கு வகைசெய்யும் பயன்மிகு தொடர்பிணைப்பு ஏற்பட வழிவகுத்தல் 


Composition of Delegation Team of Teacher Leaders:

Leader: Mrs Tamilarasi Subramaniam, Master Teacher (TL), AST

Co-leader: Mdm Alli Allagoo, Master Teacher (TL), AST


No comments:

Post a Comment